'ஜனாதிபதி அநுர மிரட்டுகிறார்.." சுமந்திரன் விசனம்


தங்களிடம் மூன்றிலிரண்டு பெரும்பான்மை உள்ளதாகவும் தன்னிடம் நிறைவேற்று அதிகாரம் உள்ளதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மிரட்டுகிறார் என தமிழ் அரசுக் கட்சியின் ஊடகப்பேச்சாளரும், பதில் பொதுச் செயலாளருமான ஜனாதிபதிசட்டத்தரணி எம். ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணியின் 60 வருட நிறைவையொட்டி நேற்று முன்தினம் புதன்கிழமை விஹாரமகாதேவி பூங்காவில் இடம்பெற்ற நிகழ்வில் ஜனாதிபதி அநுரகுமாரதிஸாநாயக்க உரையாற்றியிருந்தார்.

இந்த உரை குறித்து தமிழ் அரசுக் கட்சியின் ஊடகப்பேச்சாளரும், பதில் பொதுச் செயலாளருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பதிவில்
"அதிகாரம் ஊழல் செய்கிறது, முழுமையான அதிகாரம் முற்றிலும் ஊழல் செய்கிறது'என்று குறிப்பிட்டார்.
"ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, பாராளுமன்றத்தில் தனக்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை இருப்பதாக அச்சுறுத்துகிறார்.   விசித்திரமாக அவர் தன்னிடம் உள்ள நிறைவேற்று அதிகாரத்தைக் குறிப்பிடுகிறார்! அதிகாரம் ஊழல் செய்கிறது, முழுமையான அதிகாரம் முற்றிலும் ஊழல் செய்கிறது.

யாழ்ப்பாண மாநகர சபையில் உள்ள 41 இடங்களில் 10 இடங்கள் பெரும்பான்மையைக் கொண்டுள்ளன என்று அவர் கூறும் போது அவரது கணிதத் தகைமை வெளிப்படுகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.